தோழிக்கு பாலியல் தொல்லை தந்த மேனேஜர்.. சம்பவம் செய்த உயிர் நண்பர்கள்- வெளியான கொலை வெறி காட்சி

x

தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி தொழிற்சாலை மேலாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மண்ணூர் பகுதியில் உள்ள தனியார் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் திருவள்ளூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். தொழிற்சாலையின் உள்ளே நுழையும் பொழுது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கத்தியால் தாக்கினர். படுகாயம் அடைந்த கோகுல் ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணை மேற்கொண்டனர். வழக்கு தொயர்பாக மனோஜ், அசோக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அப்போது தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் மனோஜின் தோழிக்கு மேலாளரான கோகுல்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் கோகுல் ராஜைக் கொல்ல முயற்சித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதே போன்று கோகுல்ராஜ் 8 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததாகவும், போலீசார் முன்னிலையில் ஒரு லட்சம் ரூபாய் அவர் நஷ்ட ஈடாக அந்தப் பெண்ணுக்கு கொடுத்ததாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்