பிஷப் பேசி கொண்டிருந்தபோதே மைக்கை பிடுங்கி எறிந்த நபர் - நெல்லை சர்ச்சில் பரபரப்பு

சிஎஸ்ஐ எனப்படும் தென்னிந்திய திருச்சபையின் கீழ் சுமார் 24 திருமண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களிடம் ஓய்வு வயது தற்போது 67 ஆக உள்ளது.

இதனை 70 ஆக உயர்த்துவதற்கு தென்னிந்திய திருச்சபையின் தலைமை முடிவு செய்துள்ளது.

இதற்கு பெரும்பாலான பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நெல்லையில் திருமண்டல நிர்வாகிகள் கூட்டம் பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயத்தில் பேராயர் பர்னபாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஏராளமான பாதிரியார்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேராயர் பர்ண பாஸ் பேசிக்கொண்டிருந்த போது, ஒருவர் அவரது மைக்கை பிடுங்கி எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாக பேசினார்.

இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com