தப்பை தட்டிக்கேட்ட சிறப்பு SI-ஐ ஆளை வரவழைத்து அடித்த நபர் - கோவையில் பரபரப்பு

x

கோவையில், குடிபோதையில் பைக் ஓட்டியதற்காக வழக்கு பதிந்ததால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடாகம் ரோடு - லாலி ரோடு ஜங்சனில் கடந்த ஞாயிறு மாலை, மது போதையில் பைக் ஓட்டிய ராஜேந்திரன் என்பவருக்கு போக்குவரத்து காவல்துறை எஸ்எஸ்ஐ மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தார். இதனால் வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட ராஜேந்திரன் தனது உறவினர் சிவதாஸை வரவழைத்து எஸ்எஸ்ஐயை தாக்கியுள்ளார். இதையடுத்து சிவதாஸ் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்