தட்டிக்கேட்ட கேப் டிரைவரை அடித்து கார் போனட்டில் இழுத்து சென்ற நபர் - சேஸிங்கில் பிடித்த போலீஸ்.. பரபரப்பு காட்சி

x



டெல்லியில் கேப் ஓட்டுனராக பணியாற்றி வரும் சேட்டன் குமார் என்பவர், பயணி ஒருவரை இறக்கிவிட்டு, ஆஷ்ரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த ராம்சந்த் என்பவரின் கார், சேட்டனின் கார் மீது 3 முறை இடித்துள்ளது. இதனால் கோபமடைந்த சேட்டன் குமார், அதுகுறித்து தகராறில் ஈடுபட்டார். அப்போது, தனது காரை இயக்கிய ராம்சந்த், காரின் போனட் மீது விழுந்த சேட்டன் குமாரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். மதுபோதையில் இருந்த ராம்சந்த், காரை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கியுள்ளார். பின்தொடர்ந்து வந்த போக்குவரத்து காவலர்கள், ராம்சந்த் காரை இடைமறித்து சேட்டனை காப்பாற்றினர். தான் காரை இடிக்கவில்லை என்றும், காரை விட்டு இறங்குமாறு அறிவுறுத்தியும், சேட்டன்குமார் இறங்கவில்லை எனவும் ராம்சந்த் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்