6 ஆண்டு காதல்... இணைய விடாமல் குறுக்கே நின்ற பெற்றோர்... - ஒன்றாக தூக்கில் தொங்கிய காதலர்கள்

x

தாம்பரம் அருகே காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அருகே பீர்க்கன்காரணை பகுதியில் வசித்து வந்தவர் ஜெயராமன். இவரும், யுவராணி என்ற பெண்ணும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், யுவராணிக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்றைய தினம் ஜெயராமன் வீட்டில், யுவராணியும் ஜெயராமனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்