லாரியின் பின்னாடி வந்த பெரிய லாரி பயங்கரமாக மோதி விபத்து - நடுவில் சிக்கி உயிருக்கு போராடிய ஓட்டுநர்

x

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஏற்பட்ட விபத்தில் லாரியில் சிக்கிய ஓட்டுநர் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டார்.

சென்னையில் இருந்து மதுரைக்கு லாரி டயரில் போடப்படும் பவுடரை ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது, அந்த லாரியின் பின்புறம் சவுக்கு மரங்களை ஏற்றி வந்த மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில், முருகன் என்ற ஓட்டுநர் லாரியில் சிக்கிக் கொண்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறிய காயங்களுடன் அவரை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்