தடுப்பில் மோதி சிக்கிய லாரி... சம்பவ இடத்தில் போலீசார் செய்த செயல்
சென்னையில், நள்ளிரவில் சுரங்கப்பாதையில் இறங்கியபோது இரும்புத் தடுப்பில் லாரி சிக்கியது. சேத்துப்பட்டு பகுதியில் உள்ள கெங்கு ரெட்டி சாலையில், ரயில் தண்டவாளத்தை கடக்க சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப் பாதையில், குறிப்பிட்ட உயரம் மேல் உள்ள வாகனங்கள் செல்லாமல் இருக்க, இரும்பில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நள்ளிரவில், இந்த சுரங்கப்பாதையில் லாரியை இறங்கும்போது இரும்புத் தடுப்பில் மோதி சிக்கிக்கொண்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரும்பு தடுப்பில் சிக்கிய லாரியை 2 புல்டோசர் உதவியுடன் வெளியே எடுத்தனர். இதில், இரும்பு தடுப்பு லேசாக கீழே இறங்கியது. பின்னர் அதனை புல்டோசர் உதவியுடன் சரி செய்தனர்.
Next Story