அடுத்தடுத்து பலியாகும் பிரதமர் திறந்துவிட்ட சிறுத்தைகள்.. தொடரும் சோகம்...இந்தியாவின் முயற்சி தோல்வியா?

x

குனோ தேசிய பூங்காவில் விடப்பட்ட மேலும் ஒரு சிறுத்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறுத்தை இனத்தை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில், எட்டு சிறுத்தைகளை பிரதமர் மோடி திறந்து விட்டார். இதைத் தொடர்ந்து அங்கு சிறுத்தைகள் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், தற்போது, தேஜாஸ் என்ற மேலும் ஒரு சிறுத்தை உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இத்துடன், கடந்த ஐந்து மாதங்களில் மூன்று குட்டிகள் உள்பட ஏழு சிறுத்தைகள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்