"சட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்" - சபாநாயகர் அப்பாவு உறுதி

x

மகளிர் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக விரைவில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிச்சயம் நிறைவேறப்பப்படும் என சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்துள்ளார்.

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் "இந்திய அரசியலமைப்பு சட்ட நாள்" விழா நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் அப்பாவு , மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கரன் மற்றும் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, மகளிர் நலன்,பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக விரைவில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு சட்டமாக நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்