கேரளாவை அதிர வைத்த மருத்துவர் கொலை.. கொலையாளியின் பகீர் வாக்குமூலம்..

x

கேரளாவில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆண் மருத்துவரை எதிர்நோக்கி இருந்த நிலையில், பெண் மருத்துவர் சிக்கி உயிரிழந்ததாக கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொட்டாரக்கரை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் போலீசாரால் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் சந்தீப் அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனா தாசை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து சந்தீப்பிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, மருத்துவமனையில் ஊழியர்களின் அணுகுமுறை பிடிக்கவில்லை என்றும், தன்னை தாக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தால், கத்திரிக்கோலால் ஆண் மருத்துவரை தாக்க முயன்றபோது, மருத்துவர் வந்தனா தாஸ் சிக்கியதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்