நாட்டையே உலுக்கிய சம்பவம்.. 22 உயிர்களை பறித்த கேரள படகு.. அன்றே எச்சரித்த பிரபல நிபுணர்

x

கேரள படகு விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில், இதனை பேரிடர் மீட்பு நிபுணர் ஒருவர் முன்கூட்டியே கணித்துள்ளார். மலப்புரத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த படகு விபத்தில் குழந்தைகள் உட்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி, கேரளாவை சேர்ந்த பேரிடர் மீட்பு நிபுணர் முரளி துமாறக்குடி என்பவர், சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து தற்போது வைரலாகி வருகிறது. அதில், படகு விபத்து நிகழும் என்றும், இது ஜோதிடமோ, யூகமோ இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.விபத்து சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை விடுத்தும், விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதை கவனித்து இக்கருத்தை கூறுவதாகவும் அதில் பதிவிட்டிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்