லாட்டரியில் அடித்த ஜாக்பாட்... "யாராவது அடித்து பிடுங்கிடுவாங்க சார்.." - பயந்து போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்த கூலித் தொழிலாளி

x

கேரளாவில் தனக்கு லாட்டரியில் விழுந்த 75 லட்ச ரூபாய் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் வடமாநில தொழிலாளர் ஒருவர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலை அமைக்கும் கூலித் தொழிலாளியான எஸ்.கே.பதேஷுக்கு லாட்டரியில் 75 லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டே பதேஷ் போலீசாரின் உதவியை நாடினார். காவல் நிலையம் சென்ற பதேஷ், "இதை யாராவது திருடி விடுவார்கள்" எனவும், "இதை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை" என்றும் புலம்பியுள்ளார். அவருக்கு வங்கியில் செலுத்தி பணத்தைப் பெற்றுத் தர உதவுவதாக போலீசார் தெரிவித்த நிலையில், பரிசுத் தொகை கிடைத்தவுடன் மீண்டும் சொந்த ஊர் செல்ல உள்ளதாக பதேஷ் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்