பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரம்... குழந்தையை மாற்றிவிட்டதாக உறவினர்கள் வாக்குவாதம் - அரசு மருத்துவமனையில் பரபரப்பு

x

தாராபுரம் அடுத்த கருங்காலிவலசு கிராமத்தை சேர்ந்த அபினவ் என்பவரின் மனைவி கீதா, பிரசவத்திற்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அப்போது, அவருக்கு பிறந்த குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது. குழந்தையை புதைப்பதற்காக அரசு ஆம்புலன்ஸ் மூலம் சுடுகாட்டிற்கு எடுத்து சென்றவர்கள் குழந்தையை புதைக்காமல் மருத்துவமனைக்கு திரும்பி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மாற்றிவிட்டதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்..


Next Story

மேலும் செய்திகள்