செம்மரக் கடத்தல் விவகாரம்..! சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கின் மாமனார் கைது..?

x

செம்மரக் கடத்தல் விவகாரத்தில் இளவரசியின் மகன் விவேக்கின் மாமனார் பாஸ்கரனிடம், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சென்னை, அண்ணா நகரில், சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கர் வசித்து வருகிறார். பர்னிச்சர் கடை நடத்தி வரும் இவர் மீது செம்மரக் கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பாஸ்கரன் வீட்டில் இருந்து அவரை அழைத்து சென்ற மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தி.நகர், ஜி.என்.ஷெட்டி சாலையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு இயக்குநரகத்தில் நேற்று இரவு விசாரணை நடத்தினர். மேலும், இதனைத் தொடர்ந்து பாஸ்கரன் கைது செய்யப்பட்டு காலை 10.30 மணியளவில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்