தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம்... 4 சிறுவர்களை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில், ஏற்கனவே 21 பேரிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி சோதனை நடத்தப்பட்டது. மேலும், நான்கு சிறார்களிடமும் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்த, மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையில், டிஎன்ஏ பரிசோதனைக்கு சிறார்களின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வழக்கு விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் நான்கு சிறார்களையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com