காலால் எட்டி உதைக்கப்பட்டு சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் - நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சபாநாயகர்

x

கேரளாவில் கார் மீது சாய்ந்து நின்றதால் தாக்கப்பட்ட வடமாநில சிறுவனை, மருத்துவமனையில் சபாநாயகர் ஏ.என். ஷம்சீர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கேரளா மாநிலம் கண்ணூரில் சாலையோரம் நிறுத்தப்பட்ட காரின் மீது சாய்ந்து நின்ற ராஜஸ்தானை சேர்ந்த சிறுவனை, கார் உரிமையாளர் காலால் எட்டி உதைத்ததால் சிறுவன் காயமடைந்தார். தலச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை, கேரள சபாநாயகர் ஏ.என் ஷம்சீர் நேரில் சென்று சிறுவனையும், அவரது பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்களை எக்காரணம் கொண்டும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று சபாநாயகர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்