கோவையை புரட்டிப் போட்ட சம்பவம் - கணவனுக்கு தெரியாமல் ரூ.25 லட்சம்.. - 2 ஆசிரியர்கள் கைது

x

கோவை வடவள்ளியில் கடன் தொல்லை காரணமாக 10 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவில் வசித்து வந்த பொறியாளர் ராஜேஷ் என்பவரின் வீட்டில் இருந்து நேற்று முன் தினம் துர்நாற்றம் வீசியதையடுத்து, கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அப்போது ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து ராஜேஷ் எழுதிய கடிதத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ராஜேஷின் மனைவி லக்சயா, தனியார் பள்ளி ஆசிரியர் ஜெயபாரத் என்பவருடன் நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. லக்‌சயாவின் தேவைக்காக தன்னிடம் இருந்ததையும், தனது நண்பர் தீபக்கிடம் இருந்தும் பணம் பெற்றும் ஜெயபாரத் சிறுக சிறுக 25 லட்சம் ரூபாய் வரை கொடுத்த நிலையில், பணத்தை திரும்ப கேட்டுள்ளார். லக்சயா உரிய பதிலளிக்காததால், அவரது கணவரிடம் இதுகுறித்து இருவரும் முறையிட்டதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாலும், கடனளித்தவர்கள் தொகையை திரும்ப கேட்டதாலும் குடும்பத்துடன் ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்