பாஜக பிரமுகரின் கார்களுக்கு தீ வைத்த சம்பவம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

x

திண்டுக்கல் அருகே பாஜக பிரமுகரின் வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவத்தில் 3 பேர் சரண் அடைந்துள்ளனர்.

குடை பாறைபட்டியில் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் செந்தில் பால்ராஜ். கடந்த 24 ஆம் தேதி, இவருக்கு சொந்தமான குடோனில் நிறுத்தப்பட்டிருந்த, கார் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து வழக்குபதிந்த போலீசார், பேகம்பூரை சேர்ந்த சிக்கந்தர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஹபீப் ரகுமான், முகமது இலியாஸ் மற்றும் முகமது ரபிக் என்ற மூவர் தங்களது வழக்கறிஞர்களுடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மூவரும், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்