வடிவேலு காமெடி போல் நடந்த சம்பவம்.. கூட வந்தவருக்கு ஆப்பு வைத்து விட்டு எஸ்கேப்.. "வரட்டா மாமே டுர்ர்ர்.."

x

சேலம் மாவட்டம் கோட்டமேட்டுபட்டி ஊராட்சியில் இருசக்கர வாகனங்கள் விற்பனை ஷோருமிற்கு வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர், வாகனத்தை ஓட்டி பார்த்துதான் வாங்க முடியும் என கூறியுள்ளார். மேலும், உடன் வந்தவரை ஷோரூமில் விட்டு விட்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தோடு மாயமாகியுள்ளார். இதையடுத்து, ஷோருமில் இருந்தவரும் நழுவ முயற்சிக்கவே, அவரை மடக்கி பிடித்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விசாரித்தபோது இருசக்கர வாகனத்தோடு தப்பியவர் யார் என தனக்கு தெரியாது எனவும் ரயிலில் வந்தபோது பழக்கம் ஏற்பட்டு, தன்னை அவர் அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இருசக்கர வாகனத்தோடு தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்