பெண் குழந்தை பிறந்ததால் அப்படியே மனைவியுடன் விட்டு சென்ற கணவன்.. தீட்டு என்று மனைவியை ஒதுக்கிய சைக்கோ.. 2வது திருமணத்திற்கு தயாராகும் கொடுமை

x

பெண் குழந்தை பிறந்தால் தோஷம் உண்டாகும் என கூறிய ஜோசியரின் பேச்சை கேட்டு, கர்ப்பிணி மனைவியை துன்புறுத்தி வந்த கணவன், மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் அவரை மருத்துவமனையிலே விட்டு சென்ற சம்பவம் கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது...

கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடை அடுத்த மாங்கோடை சேர்ந்தவர் அனு....

இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், படித்து முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்த நிலையில், கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார்...

அப்போது, திருமணத்திற்கு வந்திருந்த அதே பகுதியை சேர்ந்த ரஜித் என்பவர் மீது அனுவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதை தனது வீட்டாரிடமே அனு தெரிவித்த நிலையில், அவரின் குடும்பத்தார் இளைஞர் குறித்து விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்...

விசாரணையின் முடிவில், ரஜித் மீது நல்ல அபிப்ராயம் ஏற்படவே, கடந்த 2021 ஆம் ஆண்டும் அக்டோபர் 20 ஆம் தேதி தங்களின் மகளை ரஜித்துக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்...

திருமணம் முடிந்து... தொடக்கத்தில் சில நாட்கள் சந்தோஷமாக இருந்த தம்பதியினருக்குள் நாட்கள் செல்ல செல்ல விரிசல் ஏற்பட்டுள்ளது...

தன்னை கிறிஸ்தவர் என கூறி திருமணம் செய்துகொண்ட ரஜித், அதற்கு சம்பந்தமே இல்லாமல் ஜாதகம், மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை நம்பகூடியவராக மாறி தன்னையும் அதிலும் ஈடுபடுமாறு வற்புறுத்தியது அனுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது....

இதற்கிடையே, நன்கு படித்து... நல்ல வேளையில் இருப்பதாக கூறிய ரஜித், பின்பு கணவர் ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரியவர பேரதிர்ச்சியடைந்திருக்கிறார்..

இதையெல்லாம் வெளியில் காட்டிக்கொண்டால் தனது குடும்பத்தினர் வருத்தப்படுவார்கள் என எண்ணிய அவர், கணவனின் பின்னணியை பார்த்தா காதலித்தோம் என நினைத்து கடைசியில் அவரை அனுசரித்து வாழ முடிவு செய்திருக்கிறார்..

அங்குதான் ஆரம்பித்தது எல்லாமே...

மூடநம்பிக்கைகளில் மூழ்கி போய் மனைவியை துன்புறுத்தி வந்த ரஜித், செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் மனைவியை தீட்டு எனக்கூறி, அவரை ஒதுக்கி வைத்து துன்புறுத்தியிருக்கிறார்....

இந்நிலையில், ஆண் குழந்தை தான் வேண்டும் எனவும், பெண் குழந்தை பிறந்தால் தோஷம் என ஜோசியர் கூறிய ஜாதகத்தை சுட்டிக்காட்டி மனைவியை ரஜித் தொடர்ந்து கூறி வந்த சூழலில் தான்s, அனு கர்ப்பம் தரித்திருக்கிறார்...

மனைவி கர்ப்பம் தரித்த தொடக்கத்தில், அவரை நன்கு உபசரித்தும், கவனித்தும்... கரிசனம் காட்டி வந்த ரஜித், நாட்கள் செல்ல செல்ல சைக்கோவாக மாறி சித்ரவதை செய்ய ஆரம்பித்திருக்கிறார்....

இதற்கிடையே அனுவின் ஏழாவது மாதத்தில் அவரை அவரது குடும்பத்தினர் முறைப்படி அழைத்து சென்றதிலிருந்து, மனைவியை முழுவதுமாக புறக்கணித்திருக்கிறார் ரஜித்...

கிட்டத்தட்ட பிரசவ நாட்கள் நெருங்கி கொண்டிருந்ததாலும், கர்ப்ப காலத்தின் இறுதி நாட்களிலும் கணவனை அரவணைப்பை விரும்பிய அனு, ரஜித்தின் புறக்கணிப்பால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்...

இந்நிலையில், பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது... இதையறிந்த, ரஜித் மருத்துவமனையில் வைத்தே மனைவியையும், பிறந்த குழந்தையையும் தவிக்க விட்டு சென்ற நிலையில், கிட்டத்தட்ட நீண்ட நாட்களாக மனைவியையும், குழந்தையையும் பார்க்கவரவில்லை என கூறப்படுகிறது..

இது தொடர்பாக அனுவின் வீட்டார், பல முறை ரஜித்தின் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர்களை ரஜித் தகாத வார்த்தைகளை கூறி திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது...

இந்நிலையில், அனுவின் குடும்பத்தினர் ரஜித் மீது போலீசில் புகாரளித்துள்ளனர்... ரஜித்தை காவல்நிலையம் அழைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாது என்றும், வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் முறையிட்டு விவாகரத்து பெற்றுக்கொள்ளும் படியும் அலட்சியமாக பேசி சென்றிருக்கிறார்....

இதனால், பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி 6 மாத கைக்குழந்தையுடன் தனியே தவித்தும் வரும் அனு, தனது கணவன் 200 சவரன் நகையுடன் வேறொரு பெண்​ணை திருமணம் செய்ய முயன்று வருவதாக கூறியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்