மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய கணவர்! - விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

x

முகமது உசேன் - ரெஜினா பானு தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், நாகர்கோவில் புன்னை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளனர். வீட்டில் மயங்கிக் கிடந்த ரெஜினா பானுவை, குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவர் முகமது உசேனிடம் விசாரணை நடத்தினர். அதில், குடும்பப் பிரச்சினை காரணமாக நடந்த வாக்குவாதத்தின்போது, ஆத்திரமடைந்து மனைவியின் நெறித்துக் கொன்றதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முகமது உசேனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்