விசித்திர ஆயுதத்தால் 2வது மனைவியை 12 துண்டுகளாக வெட்டி கூறு போட்ட கணவன்

x

ஜார்கண்டின் சாகேப்கஞ்ச் அருகே பல துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

அதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார், இளம்பெண்ணின் உடல் பாகங்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

12 பாகங்களை கிடந்த உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இறந்தது பழங்குடியினத்தை சேர்ந்த ரூபிகா பஹாதின் என்பதும், அவரது கணவரான தில்தார் அன்சாரியே இந்த கொடூரத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்துள்ளது.

ரூபிகாவுடன் 2 வருடங்களாக தொடர்பில் இருந்த தில்தார் அன்சாரி, 2வது திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில், ரூபிகாவை கொலை செய்த அவர், உடலை பல துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார்.

கொலைக்கான காரணம் குறித்து தில்தார் அன்சாரியிடம் விசாரித்து வரும் போலீசார், உடலை மின்சாரத்தில் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்