தங்கையை கொடுமைப்படுத்திய கணவர்..ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்..தூத்துக்குடியில் அதிர்ச்சி

x

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் சிவசூர்யா. கொத்தனாராக பணிபுரிந்து வந்த இவர், அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லாததால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில், முத்துலட்சுமியை சிவசூர்யா அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சாத்தான்குளம் அருகே சிவசூர்யா தனியே வீடு எடுத்து தங்கியிருக்கிறார். இந்நிலையில், முத்துலட்சுமியின் சகோதரர் மற்றும் அவருடைய நண்பர்கள் வீடு புகுந்து சிவசூர்யாவை அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், சிவசூர்யா துடிதுடித்து உயிரிழந்த நிலையில், முத்துலட்சுமியின் அண்ணன் வெங்கடேஷ் மற்றும் அவருடைய நண்பர்களான நாராயணன், முத்துக்கண் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்