தூங்கும் போது அரங்கேறிய பயங்கரம்... அப்படியே சரிந்து துடிதுடித்த 2 உயிர்கள் விசாரணையில் வெளியான பகீர் உண்மை

x

திண்டுக்கல் அருகே, உறவை துண்டித்ததால், ஆத்திரமடைந்த கள்ளக்காதலன், பெண் மற்றும் அவரது தாயை, கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப, தகாத உறவில் ஏற்பட்ட சண்டையில், பெண்ணையும், அவரது தாயையும், கள்ளக்காதலன் கொடூர கொலை செய்த சம்பவம், ஒரு கிராமத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலனியில் வசித்து வருபவர் வள்ளியம்மாள். இவரது மகள் ராசாத்திக்கு, லட்சுமணன் என்பவருடன் திருமணமாகி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

கள்ளிப்பட்டி அருகே தனியார் இரும்புத் தொழிற்சாலையில், லட்சுமணன் கூலி வேலை செய்து வரும் நிலையில், அவரது மனைவி ராசாத்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகிறார்.

இந்த நிலையில், வள்ளியம்மாள், அவரது மகள் ராசாத்தி, மருமகன் லட்சுமணன் ஆகியோர், இரவு உணவுக்குப் பின் தூங்கச் சென்ற நிலையில், திடீரென கத்தியுடன் புகுந்த மர்மநபர் ஒருவர், வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இந்த தாக்குதலில் தாய் வள்ளியம்மாள் மற்றும் அவரது மகள் ராசாத்தி ஆகிய இருவரும், நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கிடந்த லட்சுமணனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மூர்த்தி, செட்டிநாயக்கன்பட்டி

"கத்தியால் குத்தியதில் 2 பெண்கள் இறந்து விட்டனர்"

"ஆபத்தான நிலையில் லட்சுமணனை மருத்துவமனையில் சேர்த்தோம்"

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்து விட்டு தப்பியோடிய நபர் யார்? என்பது குறித்து, போலீசார் விசாரித்தபோது, தகாத உறவில் ஏற்படட்ட விரிசலே, இந்த விபரீத சம்பவத்திற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

கடந்த 2 ஆண்டுகளாக ராசாத்தியுடன் தகாத உறவில் இருந்து வந்த சத்தியபிரியன் என்பவர், கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, தலைமறைவாக இருந்த அவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், ராசாத்தியுடன் சத்தியபிரியனுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், அடிக்கடி ராசாத்தியின் வீட்டிற்கே சத்தியபிரியன் வந்து, அவருடன் நெருக்கமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களின் கள்ளத்தொடர்பை அறிந்த கணவர் லட்சுமணன் மற்றும் தாய் வள்ளியம்மாள், ராசாத்தியை கண்டிக்கவே, அவர், சத்தியபிரியனுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சத்தியபிரியன், இந்த கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது போலீசாரின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சத்தியப் பிரியனை, போலீசார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், சிறையில் அடைத்தனர்.




Next Story

மேலும் செய்திகள்