குளிக்கும் போது நடந்த பயங்கரம்..மின்கம்பி அறுந்து விழுந்து இளம்பெண் பரிதாபம்

x

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மின்கம்பி அறுந்து குளத்தில் விழுந்ததால் அங்கு குளித்து கொண்டிருந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் கிராமத்தில் டிராக்டர் சென்ற போது சாலையோர மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதில் மின் கம்பி அறுந்து அங்குள்ள குளத்தில் விழுந்ததால் அங்கு குளித்து கொண்டிருந்த பிரகதீஸ்வரி என்ற இளம் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.இதையறிந்து கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்