சுவர் இடிந்து விழுந்து சிறுவர்களுக்கு நேர்ந்த கொடூரம்

x

ஹைதராபாத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கொண்ட 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சம்பாபட் பகுதியில் பழைய கட்டிடத்தின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் ராஜகுமார் , மது என்ற 2 சிறுவர்கள் சிக்கி கொண்டனர். தகவலறிந்த மீட்பு படையினர் மற்றும் போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் சுவர் இடிபாடுகளை அகற்றி 2 சிறுவர்களையும் மீட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்