தந்தையை மகனே துடிதுடிக்க கழுத்தறுத்து கொன்ற பயங்கரம்.. -விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

x

தனது பேரில் நிலத்தை எழுதி வைக்காத ஆத்திரத்தில் மகனே தந்தையை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே திப்பேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடராமணப்பா. 90 வயதான இவருக்கு, 3 மகன்கள் மற்றும் 3 மகள் என 6 பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக பெங்களூருவில் உள்ள தனது மகளுடன் வசித்து வந்த முதியவர் , தனது இரண்டாவது மகளுக்கு 6 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவருடைய கடைசி மகன் சிவானந்தா, முதியவரை திப்பேப்பள்ளி கிராமத்திற்கு வரவழைத்து தனது பெயரிலும் 6 ஏக்கர் நிலத்தை எழுதி வைக்க கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு தொடர்ந்து மறுத்து வந்த தனது தந்தையை, தோட்டத்திற்கு தனியாக அழைத்த சிவானந்தா, கத்தியால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், முதியவரின் மகன் சிவானந்தாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்