ஒரு மாதமாக மின்சாரம் இன்றி தவிக்கும் மலைவாழ் மக்கள்

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கீழூர், மேலூர் மலைகிராம மக்கள் மின்மாற்றி பழுது காரணமாக ஒரு மாத காலமாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். பழுதடைந்த மின்மாற்றியை மலைவாழ் மக்கள் போதமலை அடிவாரத்தில் கொண்டு வந்து வைத்துள்ளனர். இதனை மின்வாரிய அலுவலகத்தில் ஒப்படைத்த ஊழியர்கள், புதிய மின்மாற்றியை போதமலை அடிவாரத்தில் வைத்துள்ளனர். மின்மாற்றியை வைத்து 10 நாட்கள் ஆன நிலையில், அதனை மலைப்பகுதிக்கு எடுத்துச் சென்று பொருத்த முடியாததால், கீழூர், மேலூர் மலைகிராம மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கும் சூழல் தொடர்கிறது.


Next Story

மேலும் செய்திகள்