பள்ளிக்குள் பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்த ஹெட் மாஸ்டர்.. தக்க பாடம் புகட்டிய மாணவன் - தீயாய் பரவும் லீக் வீடியோ

x

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் சிலகலப்போடி அரசு சிறுபான்மையினர் உண்டு உறைவிடப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஆனந்த பாபு....

இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

48 வயதான தலைமை ஆசிரியர் ஆனந்தபாபுவிற்கும், அதே பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் கிளார்க் வேலை செய்யும் பெண் ஒருவருக்கும், பணி ரீதியாக பழக்கம் ஏற்பட்டு, நட்பாக மாறி, கள்ளக்காதலாகியுள்ளது.

பள்ளி நேரம் முடிந்ததும் அப்பெண்ணை தனது அறைக்கு அழைத்துச்சென்று, ஆனந்தபாபு ஆனந்த தாண்டவம் ஆடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

பள்ளி என்றும் கூட பாராமல், அதனை பள்ளி அறையாக மாற்றி, இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

இதனை சில மாணவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த தகவல் பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் தெரிய வந்திருக்கிறது.

ஆனால் இந்த விஷயம் அந்த ஜோடிக்கு தெரியவில்லை. தலைமையாசிரியரின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினமும் மாலை பள்ளி முடிந்ததும், வழக்கம்போல் அந்த பெண் ஊழியரை தனது அறைக்கு அழைத்து சென்ற தலைமை ஆசிரியர் ஆனந்த பாபு, உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனைக்கண்ட மாணவன் ஒருவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய, அந்த காட்சிகள் தீயாய் பரவி, கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருவர் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்து, கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

நெறி தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியரே, நெறி தவறி, பள்ளி வளாகத்திலேயே சல்லாபத்தில் ஈடுபட்டது ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்