மாணவனின் மண்டையை உடைத்த தலைமை ஆசிரியர்

x

ராமநாதபுரம் அருகே தலைமுடி வெட்ட வில்லை எனக்கூறி, தலைமை ஆசிரியரால் தாக்கப்பட்ட 12-ம் வகுப்பு மாணவன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

வைரவன் கோவிலை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவனை அழைத்த தலைமை ஆசிரியர், ஏன் முடி வெட்டவில்லை என கூறி அவனை அடித்து மண்டை உடைத்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மாணவன், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்