சாலையில் நகைகளை தொலைத்து பதறிய தலைமை ஆசிரியர் - கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்த மாணவியின் தாய்

x

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் தலைமை ஆசிரியர் சாலையில் தொலைத்த நகைகளை, மாணவியின் தாய் கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

ஓட்டப்பிடாரத்தில் உள்ள மெக்குவாய் கிராமிய மேல்நிலைபள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் செல்வராணி, உடன் பணிபுரியும் ஆசிரியருடன் இரு சக்கர வாகனத்தில் புதியம்புத்தூருக்கு சென்றுள்ளார். அப்போது, செல்வராணி, 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் தான் வைத்திருந்த கைப்பையைத் தவறவிட்டார். கைப்பை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதேநேரம், அந்தப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி மதிஷாவின் தாய் முத்துலட்சுமி, கீழே கிடந்த அந்த கைப்பையை எடுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து, மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்த போலீசார், விசாரணையில் உறுதிப்படுத்தி விட்டு அந்த கைப்பையை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். மேலும், முத்துலட்சுமி, மகள் மதிஷா ஆகியோரை பாராட்டி அவர்களுக்கு காவல் துறை சார்பில் 2 ஆயிரம் ரூபாய் பரிசளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்