மக்களை சுத்தி அடிக்கும் மளிகை விலை... அமுதம் எடுத்த அதிரடி முடிவு - போட்டி போட்டு குவிந்த மக்கள்
சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலை கடைகளில் இன்று முதல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி ஆகியவை கொள்முதல் விலைக்கே விற்பனை செய்யப்படவுள்ளது.
தக்காளி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலை கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி உள்ளிட்டவற்றை இன்று முதல் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் அரைகிலோ துவரம் பருப்பு 75 ரூபாய்க்கும், அரைகிலோ உளுத்தம் பருப்பு 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் விற்பனை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.