சுக்கு நூறாக நொறுங்கிய பஸ் கண்ணாடி... டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து

x

செஞ்சி அருகே அரசு பேருந்து ட்ராக்டர் மீது மோதிய விபத்தில், நடத்துனர் உட்பட மூவர் காயமடைந்தனர்.

செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, முன்னால் சென்ற ட்ராக்டர் மீது மோதியது.

இந்த விபத்தில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.

மேலும் பேருந்து நடத்துனரும், இரண்டு பயணிகளும் காயமடைந்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அரசு பேருந்தின் பிரேக் பழுதடைந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்