பிறந்தநாளுக்கு ஆசையா வந்த காதலுனுக்கு ஜூஸில் விஷம் கொடுத்து கொன்ற காதலி.. கடைசி நிமிடத்தில் காதலன் சொன்ன விஷயம் - சென்னையில் அரங்கேறிய பயங்கரம்

x

பிறந்தநாள் அன்று சந்திக்க வந்த காதலனுக்கு, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலில் கொன்ற அதிர்ச்சி சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். திருப்பூரில் பணியாற்றிய சஞ்சீவ் குமார், தனது பிறந்தநாளை காதலியுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக, சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் சென்னை வந்த அவர், காதலியுடன் ஊர் சுற்றிவிட்டு, ஊர் திரும்புவதற்காக கோயம்பேடு சென்றுள்ளார். அப்போது, காதலி விஷம் கலந்த குளிர்பானத்தை, சஞ்சீவ் குமாருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சஞ்சீவ்குமார், உறவினர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன், காதலி குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்துவிட்டதாகக் கூறி, சஞ்சீவ்குமார் மரண வாக்குமூலம் கொடுத்ததால், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பிரேத பரிசோதனைக்குப் பிறகு, சஞ்சீவ்குமாரின் உடல் சொந்த ஊரான பரமக்குடியில் உள்ள மஞ்சூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்