ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்.. உடனே குதித்து காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்.. குவிந்த பாராட்டுக்கள்..முதல்வர் நெகிழ்ச்சி ட்வீட்

x

பஞ்சாப் மாநிலத்தில், ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பெண்ணை மீட்ட தமிழக ராணுவ வீரர் நவநீத கிருஷ்ணனை ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே நேரில் அழைத்து பாராட்டி விருது கொடுத்தார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அய்யூர் கிராமத்தை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் நவநீத கிருஷ்ணன், கடந்த 2018-ஆம் ஆண்டு ராணுவ மருத்துவ பிரிவில் சேர்ந்தார். பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பணியாற்றி வரும் அவர், கடந்த 16-ஆம் தேதி, பக்ரா ஆற்றில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை, தண்ணீரில் குதித்து காப்பாற்றினார். மேலும், முதலுதவி சிகிச்சை வழங்கி, கார்டியோ நுரையீரலுக்கு புத்துயிர் அளித்து, அதன் மூலம் அவரது உயிரைக் காப்பாற்றினார். அவருடைய ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே நேரில் அழைத்து பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்