Avoid செய்த தோழி.. கழுத்தில் கத்தியை இறக்கிய இளைஞர்.. வீட்டு மாடிகளில் ரன்னிங்.. சேஸிங்.. சென்னையில் பயங்கரம்

x

சென்னை நந்தம்பாக்கத்தில், காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை, சினிமா பாணியில் போலீசார் விரட்டிச் சென்று பிடித்த சம்பவத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சென்னையை அடுத்த பரங்கிமலை ஏழு கிணறு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, அடையாறு பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

பரங்கிமலை பகுதியை சேர்ந்த 22 வயதான நவீன் என்ற இளைஞருக்கும், கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக பழகி வந்த நிலையில், நவீனுடன் பேசுவதை இளம்பெண் திடீரென தவிர்த்து வந்துள்ளார்.

அதன் பிறகு கல்லூரி மாணவியுடன் பலமுறை பேச முயன்ற நவீனுக்கு, ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இந்த நிலையில் தான், வழக்கம் போல அடையாறில் உள்ள கல்லூரிக்கு சென்ற இளம்பெண், கல்லூரி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

பரங்கிமலை ஏழுகிணறு பகுதியில் காத்திருந்த நவீன், அங்கு வந்து கொண்டிருந்த மாணவியை வழிமறித்துள்ளார்.

தன்னிடம் இருந்து விலகக் காரணம் என்ன? என்று கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தன்னை காதலிக்குமாறு நவீன் வற்புறுத்தவே, அதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த நவீன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கல்லூரி மாணவியின் கழுத்தில் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மாணவி சரிந்து விழுந்தார்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில், மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அதுகுறித்து விசாரணை செய்தனர். பின்னர், மாணவியை கத்தியால் குத்திவிட்டு அதே பகுதியில் சுற்றித் திரிந்த நவீனை, போலீசார் பிடிக்க முயன்றபோது, அவர் அங்கிருந்து தப்பியோடினார்.

அதனைத் தொடர்ந்து, சினிமா பாணியில் விரட்டிய போலீசார், 3 கிலோ மீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று இளைஞரை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது களைப்படைந்து சோர்வாக காணப்பட்ட நவீனை, போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில், இளைஞர், மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்