வலையில் சிக்கி மூர்ச்சையான ராட்சத 'உடும்பு' சுறா... காப்பாற்ற முடியாமல் தவித்த மீனவர்கள்... - நிமிடத்தில் கடல் அன்னை செய்த மாயாஜாலம்

x

குமரி மாவட்டம் இரவிபுத்தன்தறை மீனவ கிராமத்தில் மீனவர்கள் விரித்த கரைமடி வலையில் தவறுதலாக சிக்கி கரைக்கு வந்த அரிய வகை சுறாமீன், பல மணி நேர போராட்டத்திற்குப் பின் மீண்டும் கடலுக்குள் சென்றதைக் கண்டு அனைவரும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். இந்த அரியவகை உடும்பு சுறாமீனை மீனவர்கள் வலையைக் கிழித்து வெளியேற்றிய நிலையில், அது கடலுக்குள் செல்ல முடியாமல் கரையிலேயே மூர்ச்சையுற்றது... ஆனால், தன் பிள்ளையின் நிலைகண்டு கண்ணீர் வடித்த கடல் அன்னை, அலையால் வாரி அணைத்துக் கொள்ள மீண்டும் அந்த சுறாமீன் தாய் வீடு திரும்பியது.


Next Story

மேலும் செய்திகள்