மூதாட்டியை கட்டி வைத்து கொள்ளையடித்த கும்பல்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

x

சென்னை அரும்பாக்கத்தில் மூதாட்டியை கட்டிவைத்து 25 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரும்பாக்கத்தில் 70 வயது மூதாட்டியை வீடுபுகுந்து கட்டி வைத்த கும்பல், 25 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றது. மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட மணிகண்டன், மூதாட்டியின் மகன் மகாதேவ் பிரசாத் நடத்தும் டிரேடிங் தொழிலில் வேலை செய்து வந்துள்ளார். இதில், மகாதேவ் பிரசாத் முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது நண்பர்களை ஏவி விட்டு மூதாட்டியின் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்