ஒன்றரை கோடி பணம் கொள்ளையடித்து சென்ற கும்பல்.. 3 பேர் அதிரடி கைது

x

சென்னை யானைகவுனியில் நகை வியாபாரியிடம் ஒன்றரை கோடி வழிப்பறி.

வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக மேலும் 3 பேரை கைது செய்தது காவல்துறை.

நீலகிரி,சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பதுங்கி இருந்த இம்ரான் போலீஸில் பிடிபட்டார்.

இம்ரான், அவரது கூட்டாளிகள் உள்பட 3 பேரை கைது செய்தது காவல்துறை.

கைதான மூவரிடம் இருந்து கார் உள்பட 3 வாகனங்கள் பறிமுதல்.

கொள்ளையர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் பணத்தை மீட்டது காவல்துறை.

யானைக்கவுனி வழிப்பறி தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவை சேர்ந்த நகை வியாபாரி ஒன்றரை கோடி பணத்துடன் நகை வாங்க சவுகார்பேட்டை வந்துள்ளார்.

போலீஸ் என்று கூறி நகை வியாபாரியிடம் பணத்தை கொள்ளையடித்து சென்றது கும்பல்.

நகை வியாபாரி அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடித்த போலீசார்.

நகை வியாபாரியிடம் வழிப்பறி- மேலும் 3 பேர் கைது.


Next Story

மேலும் செய்திகள்