சென்னையின் பிரபல ரவுடியை கொலை செய்த கும்பல்

x

சென்னை, சென்ட்ரல் அருகே கல்லறை பகுதியை சேர்ந்தவர் கல்லறை அப்பு. பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கல்லறை அப்பு தனக்கு சொந்தமான ஆட்டோவை, விஜய் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதில், கடந்த ஆறு மாதமாக ஆட்டோ வாடகை தராமல் விஜய் இழுத்தடித்து வந்த நிலையில், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சம்பவத்தன்று விஜியின் வீட்டிற்கு சென்ற அப்பு, கத்தியை காட்டி அவரிடம் தகராறு செய்த நிலையில், விஜியின் கூட்டாளிகள் அப்புவை தாக்கி அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், திருவேங்கடத்தில் வசித்து வந்த விஜி, அவருடைய சகோதரர் ராஜி உட்பட ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்