இரவில் நைசாக வீட்டிற்குள் புகுந்து 55 சவரன் நகைகளை அள்ளிச்சென்ற கும்பல் - தூங்கி எழுந்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

சேலம் மாநகர் மரவனேரி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், குடும்பத்துடன் திருமண விழாவிற்காக இரும்பாலை பகுதிக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பி உள்ளார். களைப்பு காரணமாக, வீட்டில் இருந்தவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். அப்போது, வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்த மர்நபர்கள், பீரோவில் இருந்த 55 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். பொழுதுவிடிந்து பார்த்தபோது, நகை மற்றும் பணம் மாயமாகி இருப்பதைக் கண் அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்