'பியூட்டி' என நினைத்து 'பாட்டி'-யிடம் அத்துமீறிய கும்பல் - வெளுத்தெடுத்த பப்ளிக்... | Kanyakumari

x

கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் ஒரு மூதாட்டியை சுற்றிலும் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த பொதுமக்கள் என்னவென்று விசாரித்த போது அந்த மூதாட்டி தூய்மை பணியாளர் என தெரியவந்தது. பணி முடிந்து விட்டு திரும்பும் போது போதையில் அந்த இளைஞர்கள் தன்னிடம் அத்துமீற முயன்றதாக தெரிவித்துள்ளார். உடனே அந்த இளைஞர்களை யார் என விசாரித்த போது திருவண்ணாமலையில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் என தெரியவந்தது. மதுபோதையில் இருந்த அவர்கள் இளம்பெண் என நினைத்து மூதாட்டியிடம் அத்துமீற முயன்றதும் உறுதியானது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அந்த இளைஞர்களை வெளுத்தெடுத்தெனர்


Next Story

மேலும் செய்திகள்