மணல் அள்ளிய கும்பலை தடுத்து நிறுத்திய முன்னாள் அமைச்சர்

x

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக மண் மற்றும் மணல்களை, 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக செல்வதாக பொதுமக்களிடையே புகார் எழுந்தது. தகவலின் பேரில், பெரியகுளம் கண்மாய்க்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தலைமையிலான அக்கட்சியினர், மண் மற்றும் மணல் அள்ளுவதை தடுத்தனர். அப்போது இன்பத்தமிழனிடம் அந்தக் கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. தகவல் தெரிந்தும், வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சாலையின் நடுவே முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தர்ணாவில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்