முதல்வர் ஸ்டாலினை பாராட்டி கடிதம் எழுதிய முன்னாள் ஆளுநர்

x

பெண் கைதிகளுக்கு உதவும் வகையில் சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என, மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில், இனி சலவை இயந்திரங்கள் பயன்பாடு நமது மாநிலத்தில் உள்ள அனைத்து சீர்திருத்த இல்லங்களிலும் நிலையான நடைமுறையாக இடம் பெறும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொடர்ந்து சிறை சீர்திருத்தங்களை முன்னெடுத்து, அந்தத் துறையில், குறிப்பாக பெண் சிறைவாசிகளுக்கு உதவிடும் வகையில் ஒரு முன்மாதிரியாக திகழட்டும் என்றும் கோபால கிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்