லஞ்சம் பெற்ற முன்னாள் பெண் வட்டாட்சியருக்கு தினமும் Station வாசல் ஏறி இறங்க உத்தரவு

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியின் முன்னாள் பெண் வட்டாட்சியரான வசந்த மல்லிகா, வீட்டுமனை பட்டாவிற்கு தடையில்லா சான்று பெற, 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில், முன்னாள் வட்டாட்சியர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்குவதாகவும், அவர் தினமும் தூத்துக்குடி ஊழல் தடுப்பு காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்