"நமக்கு சோறு தான் முக்கியம்" தொடங்கிய உணவு திருவிழா.. சென்னைக்கு படையெடுத்த ஃபுட்டீஸ்

x

சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில், 36 மணி நேர இடைவிடாத பாரம்பரிய உணவு திருவிழா தொடங்கியது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். கிராமிய பின்னணியில் கண்கவர் அரங்குகள் அமைக்கப்பட்டு பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்யப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்று உணவு வகைகளை ருசித்தனர். விழாவில் தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என கிராமிய கலைகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்