முதல் டெஸ்ட் போட்டி.. பவுலிங்லயே வங்கதேசத்தை அலற விட்ட இந்தியா

x

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு வங்கதேசம் ஆல்-அவுட் ஆனது.

சட்டோஹ்ரம் நகரில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியின் 2ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, வங்கதேசம் 133 ரன்கள் எடுத்து இருந்தது.

3ம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில், மேலும் 17 ரன்கள் சேர்த்து வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் 254 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா, 2வது இன்னிங்சில் தற்போது ஆடி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்