திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. தீயில் கருகிக் கிடந்த பெண்..!

x

விருதுநகர் மாவட்டம் மார்க்நாதபுரத்தில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த ஆலையில், மூலப்பொருட்களில் தீடீரென உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது ஆலையின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறியுள்ளன. இந்த விபத்தில் அங்கு கணக்காளராக பணியாற்றி வந்த ஜெயசித்ரா என்பவர், உடல் கருகி உயிரிழந்தார். மேலும் 12 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்