கஸ்டமரை தரதரவென இழுத்து போட்டு தாக்கிய பைனான்ஸ் ஊழியர்... நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டல்

x

பண்ருட்டியில் ஒரு மாத தவணையை செலுத்தாத வாடிக்கையாளரை, தனியார் நிதி நிறுவன ஊழியர் அடித்து தர தரவென இழுத்து செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த நடராஜன், தனியார் நிதி நிறுவனத்தில் 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று இருக்கிறார். இதில், கடைசி மாதத்திற்கான தவனையை நடராஜன் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ஆண்டிக்குப்பம் அருகே சென்று கொண்டிருந்த நடராஜனை, அங்கு வந்த டிவிஎஸ் பைனான்ஸ் நிதி நிறுவன ஊழியர் விக்கி, தவணையை செலுத்துமாறு கூறிய இருக்கிறார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஊழியர், நடராஜனை சரமாரியாக தாக்கிய நிலையில், அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரவின. இது தொடர்பாக பண்ருட்டி காவல் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்துள்ள நிலையில், பண்ருட்டி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்