வீடியோ காலில் நடந்த சண்டை... கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு - திருமணமான இருபதே நாளில் நடந்த சோகம்

x

பட்டுகோட்டை அருகே திருமணமாகி இருபதே நாட்களில், புதுமண தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பட்டுக்கோட்டை நாட்டுச் சாலை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்க்கும், மண்ணாங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுவிதாவுக்கும், கடந்த 28 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சுவிதாவும், சதீஷும், வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. அதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், சுவிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது, மனைவி தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டு சதீஷ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், மனவேதனையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்